செய்திகள்
விருதுநகர் அருகே பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அனுமன்நகரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). இவர் குல்லூர்சந்தை ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற சூலக்கரை போலீசார் சண்முகராஜ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.