செய்திகள்
மாயம்

நெட்டப்பாக்கம் அருகே கல்லூரி சென்ற மாணவி மாயம்

Published On 2021-01-15 14:19 GMT   |   Update On 2021-01-15 14:19 GMT
நெட்டப்பாக்கம் அருகே கல்லூரி சென்ற மாணவி மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூர் புது காலணியை சேர்ந்தவர் முருகன். கரும்பு வெட்டும் மேஸ்திரி. இவரது மனைவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களது மகள் சுபலட்சுமி. (வயது 19). இவர் லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை சுபலட்சுமி கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுபலட்சுமி இல்லை.

இதையடுத்து முருகன் தனது மகள் மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News