செய்திகள்
கைது

திருட்டுத்தனமாக மதுவிற்ற 3 பேர் கைது

Published On 2021-01-15 12:56 GMT   |   Update On 2021-01-15 12:56 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் திருப்போரூர் தாலுகாவுக்குட்பட்ட மானாமதி திருநிலை கிராமம் மற்றும் கொண்டங்கி பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது மானாமதி பகுதியில் சுதா (வயது41) என்ற பெண் திருட்டுத்தனமாக மதுவிற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றை கைப்பற்றிய மதுவிலக்கு துறையினர் அவரை கைது செய்தனர்.

அதேபோல திருட்டுத்தனமாக மதுவிற்றதாக திருநிலை கிராமத்தை சேர்ந்த பார்வதி (60), கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த யுவராஜ்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News