செய்திகள்
அரியலூர் அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
அரியலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் சூரக்குழி மேலத்தெரு மற்றும் கூவத்தூர் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கூவத்தூர் தோப்புத்தெருவில் ஆரோக்கியம்மாள்(வயது 28), சூரக்குழி மேலத்தெருவில் கொளஞ்சி (59) ஆகியோர் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் சூரக்குழி மேலத்தெரு மற்றும் கூவத்தூர் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கூவத்தூர் தோப்புத்தெருவில் ஆரோக்கியம்மாள்(வயது 28), சூரக்குழி மேலத்தெருவில் கொளஞ்சி (59) ஆகியோர் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.