செய்திகள்
திருமானூரில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூரில் வயிற்று வலி காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகன் சத்யராஜ்(வயது 26). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகன் சத்யராஜ்(வயது 26). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.