செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

Published On 2021-01-02 18:03 IST   |   Update On 2021-01-02 18:03:00 IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமியின் மகன் சுரேஷ்குமார்(வயது 30), கோவிந்தராஜின் மகன் செல்லதுரை. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கடந்த 26-ந் தேதி இரவு திருமானூரில் இருந்து திருவெங்கனூருக்கு சென்றனர். திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே சென்றபோது எதிரே அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்லதுரை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News