செய்திகள்
நகை பறிப்பு

போச்சம்பள்ளி அருகே ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2020-12-29 16:04 IST   |   Update On 2020-12-29 16:04:00 IST
போச்சம்பள்ளி அருகே ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி மனோன்மணி (வயது 33). இவர் புளியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மொபட்டில் போச்சம்பள்ளியில் இருந்து பர்கூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கூச்சூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News