செய்திகள்
கைது

அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2020-12-29 15:56 IST   |   Update On 2020-12-29 15:56:00 IST
அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி போலீசார், ஏரிக்கோடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேலு (வயது 55) என்பவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை போலீசார் சோதனை செய்ததில், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வேலுவை கைது செய்தனர்.

இதேபோல் தேன்கனிக்கோட்டை போலீசார், எர்ரசெட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா வைத்திருந்த அதேபகுதியை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் வீடுகளில் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News