செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-28 05:26 IST   |   Update On 2020-12-28 05:26:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீசார் திப்பசந்திரம் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே கிராமத்தை சேர்ந்தவர் குண்டப்பா (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் ராம் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் ஆசீப் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News