செய்திகள்
கொரோனா தடு்ப்பு சிறப்பு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆண்டிமடத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

Published On 2020-12-24 08:45 GMT   |   Update On 2020-12-24 08:45 GMT
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆண்டிமடம்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நேற்று அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பஸ்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், இந்து கோவில்கள் போன்ற இடங்களுக்கு வருபவர்கள் முககவசம் அணிந்து உள்ளார்களா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா, கிருமி நாசினி திரவம் பயன்படுத்துகிறார்களா என சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முககவசம் அணியாத 9 பேருக்கு தலா ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500-ம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ், இந்திய செஞ்சிலுவை சங்க ஆசிரியர் வேல்மணி, போலீஸ்காரர் ஆகியோர் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News