செய்திகள்
கோப்புபடம்

சென்னிமலை அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

Published On 2020-12-24 13:00 IST   |   Update On 2020-12-24 13:00:00 IST
சென்னிமலை அருகே மாற்றுத்திறனாளி மகளை பராமரிக்க முடியாததால் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னிமலை

சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சி திருமலை நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். அவருடைய மனைவி ராதாமணி (வயது 62). இவர்களுக்கு வள்ளி (வயது 30) என்ற மகள் இருந்தார். இவருக்கு பிறவியிலேயே 2 கால்களும் ஊனம். இவர் திருமணம் ஆகி கணவர் சரவணனுடன் ராதாமணி வீட்டிலேயே வசித்து வந்தார்.

வள்ளியை ராதாமணி பராமரித்து வந்தார். இந்த நிலையில் வயதானதால் அவரால் வள்ளியை கவனிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதாமணி மன வேதனையில் இருந்து வந்தார்.

மனமுடைந்த ராதாமணி கடந்த 15-ந் தேதி இரவு வீட்டில் இருந்தபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று ராதாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராதாமணி இறந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News