செய்திகள்
தற்கொலை

ஊத்தங்கரை அருகே விஷம் தின்று பெண் தற்கொலை

Published On 2020-12-12 14:06 IST   |   Update On 2020-12-12 14:06:00 IST
ஊத்தங்கரை அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை கிட்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புனிதா (வயது 27) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். புனிதா குழந்தைகளுடன் தன் தாய் வீடான தஞ்சாவூர் மாவட்டம் கடையார்கோவிலுக்கு தீபாவளிக்கு சென்றார்.

பின்னர் கடந்த 2-ந் தேதி தன் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது மனவேதனையில் இருந்த புனிதா வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை (விஷம்) எடுத்து தின்றதாக தெரிகிறது. இதனால் புனிதா வாந்தி எடுத்ததை பார்த்த கணவர் அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா இறந்தார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புனிதாவின் தந்தை ராஜாங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புனிதா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News