செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டை அருகே மாட்டு வியாபாரி மீது தாக்குதல் - 4 பேர் கைது

Published On 2020-12-11 19:15 IST   |   Update On 2020-12-11 19:15:00 IST
ராயக்கோட்டை அருகே மாட்டு வியாபாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் ஜீபியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 32). மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அப்பையன் (28). சம்பவத்தன்று லோகேஷ் மாட்டுடன் அப்பையன் நிலம் வழியாக சென்றார். அப்போது ஏறபட்ட வாக்குவாதத்தில் அப்பையன் தரப்பினர் லோகேசை தாக்கினார்கள். 

இதில் காயம் அடைந்த லோகேஷ் இது குறித்து கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அப்பையன், பெத்தகானப்பள்ளி அஸ்வத் (32) , கெலமங்கலம் அண்ணா நகர் முகமது சலீம் (22) , கணேசா காலனி சையத் ஜபீர் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Similar News