செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 2 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் போத்தாபுரம்-ஜெகதாப் சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த பென்னேஸ்வரமடத்தைச் சேர்ந்த முனியப்பன் (வயது 38), சந்தாபுரம் பூபாலன் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.