செய்திகள்
சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது சாரதா நகர். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் இருந்த குடிநீர் மின்மோட்டார் பழுதாகிவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் சரிவர எரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாரதாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 150 பேர் குடிநீர் கேட்டும், தெருவிளக்குகளை சரியாக பராமரிக்க வலியுறுத்தியும் வார்டு உறுப்பினர்கள் முருகேஸ்வரி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று காலை சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கோரிக்கைகளை சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது சாரதா நகர். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் இருந்த குடிநீர் மின்மோட்டார் பழுதாகிவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள தெருவிளக்குகள் முறையாக பராமரிக்காததால் சரிவர எரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாரதாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 150 பேர் குடிநீர் கேட்டும், தெருவிளக்குகளை சரியாக பராமரிக்க வலியுறுத்தியும் வார்டு உறுப்பினர்கள் முருகேஸ்வரி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் நேற்று காலை சிவகாசி-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கோரிக்கைகளை சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.