செய்திகள்
காரைக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது
காரைக்குடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கம் மற்றும் வ.உ.சி. எழுச்சி பேரவை ஆகியவற்றின் சார்பில் தங்கள் சமுதாய பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்க பரிந்துரைக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்து காரைக்குடி ஆனந்த மடத்திலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்துக்கு வட்டார வெள்ளாளர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சேவுகன் பிள்ளை தலைமை தாங்கினார்.வ.உ.சி.எழுச்சி பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.