செய்திகள்
காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவையில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்:
புதுவையில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து புதுச்சேரி அரசு, அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை மின்துறை ஊழியர்கள் தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் மயில்வாகனம் தலைமையில் மாவட்ட மின்துறை அலுவலகம் முன் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் யூனியன் பிரதேசங்கள் மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது, மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.