செய்திகள்
காரியாபட்டி அருகே தங்க நாணயங்களை திருடிய வாலிபர் கைது
காரியாபட்டி அருகே தங்க நாணயங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி:
காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரியன் (வயது 48). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 105 கிராம் தங்க நாணயங்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ஆவியூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் சூரியனின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சூரியன் வீட்டிலிருந்து 90 கிராம் தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரியன் (வயது 48). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 105 கிராம் தங்க நாணயங்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ஆவியூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் சூரியனின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சூரியன் வீட்டிலிருந்து 90 கிராம் தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.