செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பருத்தி, சூரியகாந்தி பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
ஆலங்குளம்:
விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம், கொங்கன்குளம், டி.கரிசல்குளம், வலையப்பட்டி மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ஏ. லட்சுமியாபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில் பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி இ.டி.ரெட்டியபட்டி, முத்துசாமியாபுரம், குண்டாயிருப்பு, கண்டியாபுரம், கோமாளிபட்டி, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை விட்டு, விட்டு பெய்தது.
இந்த மழை பருத்தி, சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். அதேபோல தளவாய்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் மழை பெய்தது. தாயில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். அதேபோல சேதமடைந்த சாலையில் வாகனஓட்டிகளும், மக்களும் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம், கொங்கன்குளம், டி.கரிசல்குளம், வலையப்பட்டி மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ஏ. லட்சுமியாபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில் பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி இ.டி.ரெட்டியபட்டி, முத்துசாமியாபுரம், குண்டாயிருப்பு, கண்டியாபுரம், கோமாளிபட்டி, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை விட்டு, விட்டு பெய்தது.
இந்த மழை பருத்தி, சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். அதேபோல தளவாய்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் மழை பெய்தது. தாயில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். அதேபோல சேதமடைந்த சாலையில் வாகனஓட்டிகளும், மக்களும் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.