செய்திகள்
கைது

வத்திராயிருப்பு அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

Published On 2020-12-05 13:54 IST   |   Update On 2020-12-05 13:54:00 IST
வத்திராயிருப்பு அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமாதித்தன் (வயது30). இவர் அதே பகுதியில் உள்ள விளாங்குடி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது முத்துச்செல்வம் (19), கருப்பசாமி (19), அஜித் (19), ராசுக்குட்டி (19) ஆகிய 4 பேரும் அங்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது விக்கிரமாதித்தனை, அவர்கள் 4 பேரும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த 4 பேரும் ஊருக்குள் உள்ள சமுதாய சாவடி முன்பு நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விக்ரமாதித்தனின் தந்தை பெரிய போத்தி (70) வந்துள்ளார். அவரிடம் அந்த 4 பேரும் தகராறில் ஈடுபட்டு பெரிய போத்தியை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பெரிய போத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், முத்துச்செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கருப்பசாமி, ராசுகுட்டி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News