செய்திகள்
கோப்புபடம்

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2020-12-03 19:09 IST   |   Update On 2020-12-03 19:09:00 IST
விருதுநகர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் தபால் துறையில் ஒப்பந்தக்காரர் ஆக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரிடம் அவரது 2 மகன்களுக்கும் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக 2018-ம் ஆண்டு ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தையும் திருப்பி தரவில்லை. இது பற்றி மீனாட்சி சுந்தரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாரியப்பனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News