செய்திகள்
கோப்புபடம்

வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2020-12-03 13:39 GMT   |   Update On 2020-12-03 13:39 GMT
விருதுநகர் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 56). இவர் தபால் துறையில் ஒப்பந்தக்காரர் ஆக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரிடம் அவரது 2 மகன்களுக்கும் தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக 2018-ம் ஆண்டு ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தராத நிலையில் பணத்தையும் திருப்பி தரவில்லை. இது பற்றி மீனாட்சி சுந்தரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாரியப்பனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News