செய்திகள்
மின்சார நிறுத்தம்

அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை

Published On 2020-12-02 14:44 IST   |   Update On 2020-12-02 14:44:00 IST
அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சிவகாசி:

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாத பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.

Similar News