செய்திகள்
கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

Published On 2020-12-02 08:40 GMT   |   Update On 2020-12-02 08:40 GMT
திருத்தங்கல் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் கணேசன் மகன் முனீஸ்வரன் (வயது 29). இவர் திருத்தங்கல்- செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த சுப்புராஜ் (41) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முனீஸ்வரன் சட்டைபையில் இருந்த ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன், திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News