செய்திகள்
விபத்து

அருப்புக்கோட்டையில் தடுப்புச்சுவரின் மீது கார் மோதியது- வாலிபர் பலி

Published On 2020-11-28 12:11 IST   |   Update On 2020-11-28 12:11:00 IST
அருப்புக்கோட்டையில் தடுப்புச்சுவரின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா. இவருடைய மகன் அப்துல் ரகுமான் (வயது 36). இவர் நேற்று இரவு தனது காரில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி அருகே வளைவில் திரும்பும் போது அங்குள்ள தடுப்புச்சுவரின் மீது கார் மோதியது.

இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

இதையடுத்து விபத்தில் பலியான அப்துல் ரகுமானின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News