செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

Published On 2020-11-27 01:20 GMT   |   Update On 2020-11-27 01:20 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 220 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 818 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,675 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. 66 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 15-க்கும் கீழ் நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் சற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை எச்சரிக்கையாக கொண்டு மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் சோதனை முடிவுகளையும் உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News