செய்திகள்
கைது

ராஜபாளையத்தில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் கைது

Published On 2020-11-25 08:49 GMT   |   Update On 2020-11-25 08:49 GMT
ராஜபாளையத்தில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி கருமலை நாச்சியார் (வயது 32). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது தாயாரை பார்க்க சென்றார். பின்னர் அரசு பஸ்சில் திரும்ப சேத்தூர் சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் அவருக்கு அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

அந்த பெண் சங்கரன்கோவில் முக்கு பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது, கருமலை நாச்சியார் பையில் வைத்திருந்த நகையை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக இறங்கினார்.

உடனே கருமலை நாச்சியார் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் உள்ள பயணிகள் தப்பி ஓடிய அந்த பெண்ணை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த பெண் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோடாங்கிபட்டி சேர்ந்த செல்வம் மனைவி நாகலட்சுமி என்ற லட்சுமி (40) என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 7 பவுன் நகையை போலீசார் மீட்டனர். 
Tags:    

Similar News