செய்திகள்
தேவகோட்டை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
தேவகோட்டை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூரைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி வணக்கமேரி (வயது 48). இவர் பாகனேரி அருகே உள்ள மாங்காட்டுப்பட்டியில் வசிக்கும் தனது அக்காள் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று அவர் மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருவேகம்பத்து போலீஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், வணக்கமேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.