செய்திகள்
கோப்புபடம்

இளையான்குடி அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-10 19:22 IST   |   Update On 2020-11-10 19:22:00 IST
இளையான்குடி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள சாத்தணிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 37). இவர் அந்த ஊரின் மயானத்திற்கு அருகில் உள்ள புளியமரத்தின் அடியில் இருந்து கொண்டு சட்டவிரோதமாக மது விற்றார். இதை அறிந்த இளையான்குடி போலீசார் அவரை கைது செய்து 13 மதுபாட்டில்களும், ரூ.1,070-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல தாயமங்கலம் டாஸ்மாக் கடையின் அருகில் மது விற்ற விளங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துமணியை (34) போலீசார் கைது செய்து 6 மதுபாட்டில்கள், ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.

Similar News