செய்திகள்
எஸ்.புதூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
எஸ்.புதூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
எஸ்.புதூர்:
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகே உள்ள கட்டுகுடிபட்டி கிராமத்தில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ரோந்து சென்றார். அப்போது மேலவண்ணாரிருப்பு கிராமத்தை சேர்ந்த மென்னன் (வயது 65) அங்குள்ள கடைவீதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார்.
அவரை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் கைது செய்தார். விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.