செய்திகள்
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மூக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மூக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முககவசம் வழங்கப்பட்டது. மேலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்லுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது. முகாமில், மருத்துவ அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.