செய்திகள்
கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது

Published On 2020-09-09 13:54 GMT   |   Update On 2020-09-09 13:54 GMT
ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் வில்வமரம் கோவில் தெரு பகுதியில் கீழராஜகுலராமன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒரு நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ¼ கிலோ கஞ்சா வைத்திருந்ததும், அவர் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் (வயது 71) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News