செய்திகள்
சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஆசனூர் மலைப்பகுதியில் காணாமல்போன பசுவை தேடி வனப்பகுதிக்கு சென்றார். . அப்போது அந்த வழியாக வந்த யானை சிக்கண்ணாவை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிக்கண்ணா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 40). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஆசனூர் மலைப்பகுதியில் காணாமல்போன பசுவை தேடி வனப்பகுதிக்கு சென்றார். . அப்போது அந்த வழியாக வந்த யானை சிக்கண்ணாவை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிக்கண்ணா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்