செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை

Published On 2020-08-14 15:03 GMT   |   Update On 2020-08-14 15:03 GMT
வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் மக்தும் கான் (வயது 41). மெக்கானிக். கொரோனா ஊரடங்கு காரணமாக இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் போதிய வருமானம் இன்றி குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த மக்தும் கான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டார். வீட்டில் மயங்கியபடி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மக்தும் கான் இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News