செய்திகள்
முககவசம்

கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம்

Published On 2020-07-01 15:20 GMT   |   Update On 2020-07-01 15:20 GMT
கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News