செய்திகள்
கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம்
கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.