செய்திகள்
புதுச்சேரியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 193 ஆக உயர்வு
புதுச்சேரியில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.