செய்திகள்
எலக்ட்ரிக் கடையில் பணம் கேட்டு மிரட்டல்- 3 பேர் கைது
எலக்ட்ரிக் கடையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் திருவேங்கடம் என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், ‘நீ கடை நடத்தும் இடம் அரசுக்கு சொந்தமானது. இதுகுறித்து புகார் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ. 50 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் திருவேங்கடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவேங்கடத்துக்கு பேசிய செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தியதில், காரைக்கால் நகர பகுதியை சேர்ந்த ரபீக் (வயது 36), இளையராஜா (34) சுதன் (36) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் திருவேங்கடம் என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், ‘நீ கடை நடத்தும் இடம் அரசுக்கு சொந்தமானது. இதுகுறித்து புகார் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ. 50 ஆயிரம் உடனடியாக தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் திருவேங்கடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவேங்கடத்துக்கு பேசிய செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தியதில், காரைக்கால் நகர பகுதியை சேர்ந்த ரபீக் (வயது 36), இளையராஜா (34) சுதன் (36) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.