செய்திகள்
மோசடி

வட்டிக்கடையில் துணிகரம் - கவரிங் நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி

Published On 2020-06-10 12:24 GMT   |   Update On 2020-06-10 12:24 GMT
வட்டிக்கடையில் கவரிங் நகை கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மரக்காணம்:

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 50). இவர் மரக்காணம் பஸ் நிலையம் அருகில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று சாமிநாதன் கடையில் இருந்து வெளியே சென்றார். கடையில் அவரது மனைவி இருந்தார்.

அப்போது ஒருவர் 41 கிராமில் செயின் ஒன்று கொண்டு வந்தார். இந்த நகையை வைத்து கொண்டு ரூ. 1 லட்சம் கேட்டார். சாமிநாதன் மனைவி நகையை வாங்கிக்கொண்டு ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

இதையடுத்து கடைக்கு வந்த மர்ம நபர் பணத்தை வாங்கி கொண்டு சென்று விட்டார்.

பின்னர் கடைக்கு சாமிநாதன் வந்தார். அப்போது நகையை சோதனை செய்தார். அப்போது அந்த செயின் கவரிங் நகை என்று தெரிந்தது. இதனால் சாமிநாதன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சாமிநாதன் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து, கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News