செய்திகள்
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மல்லாடி ஆய்வு
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தில் இருந்து வேறு மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனை முழுவதும் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனைத்து வார்டுகளையும் பார்வையிட அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், இந்திய இயன்முறை மருத்துவ இயக்குனர் ராமுலு, மருந்தியல் துறைத் தலைவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கொரோனா தொற்றினால் இறக்கும் நோயாளிகளின் உடலை மத்திய அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி அரசு மருத்துவமனையில் இறந்த தமிழக பகுதியை சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
உடலை அடக்கம் செய்வதற்கான அங்கிகளையும், மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும் கலெக்டர் அருணை தொடர்புகொண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்களின் மூலம் இறந்தவரின் உடலை அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தில் இருந்து வேறு மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனை முழுவதும் உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனைத்து வார்டுகளையும் பார்வையிட அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், இந்திய இயன்முறை மருத்துவ இயக்குனர் ராமுலு, மருந்தியல் துறைத் தலைவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கொரோனா தொற்றினால் இறக்கும் நோயாளிகளின் உடலை மத்திய அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி அரசு மருத்துவமனையில் இறந்த தமிழக பகுதியை சேர்ந்தவரின் உடலை அடக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.
உடலை அடக்கம் செய்வதற்கான அங்கிகளையும், மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும் கலெக்டர் அருணை தொடர்புகொண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்களின் மூலம் இறந்தவரின் உடலை அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.