செய்திகள்
தற்கொலை

விழுப்புரத்தில் சித்தி கொடுமையால் வாலிபர் தற்கொலை

Published On 2020-05-25 10:01 GMT   |   Update On 2020-05-25 10:01 GMT
விழுப்புரத்தில் சித்தி கொடுமையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள முளைச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மகன் நரேஷ் (24). இவர் திண்டிவனம் வெல்டிங் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார்.

இந்தநிலையில் அருள் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அருள் 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து நரேஷ் சித்தி சரிவர சாப்பாடு கொடுக்காமல் கொடுமை படுத்தி வந்தனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதையடுத்து நேற்று மாலை தகராறு ஏற்பட்டது. அப்போது அருள் மற்றும் நரேசுக்கு வாக்கு வாதம் ஏற்படது. ஆத்திரம் அடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் மனம் உடைந்து நரேஷ் காணப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு முளைச்சூர் சுடுகாடு பகுதிக்கு நரேஷ் சென்றார். அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்டட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தற்கொலை செய்த நரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News