செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

Published On 2020-05-20 12:12 IST   |   Update On 2020-05-20 12:12:00 IST
பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் அடங்கிய கன்னிவாக்கம், தர்காஸ் போன்ற கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

சம்பந்தப்பட்ட கூடுவாஞ்சேரி மின்வாரிய செயற்பொறியாளர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உள்ள கன்னிவாக்கம், தர்காஸ் கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News