செய்திகள்
மது விற்பனை - கோப்புப்படம்

ஆதார் தகவல்களை பெற்று ஆன்லைன் மூலம் மது விற்பனை - கலால்துறை நடவடிக்கை

Published On 2020-05-19 14:51 IST   |   Update On 2020-05-19 14:51:00 IST
ஆதார் தகவல்களை பெற்று ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய கலால்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வருகிறது.

மதுபான கடைகளையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யலாம் என்ற நிலையில் மது விற்பனை தொடர்பாக தேசிய தகவலியல் மையம் ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளது.

இதற்கு தேவையான ஆதார் தகவல்களை அளிக்க குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு கலால்துறை இணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனால் தமிழகம் போல புதுவையிலும் டோக்கன் முறையில் மது விற்பனை செய்திட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

Similar News