செய்திகள்
தவளக்குப்பம் பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்
தவளக்குப்பம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
பாகூர்:
பாகூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-
தவளக்குப்பம், பூரணாங்குப்பம், புதுக்குப்பம், தானாம்பாளையம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், இடையார்பாளையம், பிள்ளையார்திட்டு, கொருக்குமேடு, காசான்திட்டு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.