செய்திகள்
சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை குடற்புழு நோய் தாக்கி இறந்துள்ளதாக கால்நடை டாக்டர் தெரிவித்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளி குத்தியாலத்தூர் காப்புக்காட்டுக்கு உள்பட்ட பகுதி கரிக்கால்மொக்கை. இந்த பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். உடனே இதுபற்றி மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கால்நடை டாக்டர் அசோகன் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அவர் கூறும்போது, ‘இறந்தது பெண் யானை. இறந்த யானைக்கு 25 வயது இருக்கும். குடற்புழு நோய் தாக்கி யானை இறந்துள்ளது.’ என்றார். பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வடவள்ளி குத்தியாலத்தூர் காப்புக்காட்டுக்கு உள்பட்ட பகுதி கரிக்கால்மொக்கை. இந்த பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர். உடனே இதுபற்றி மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கால்நடை டாக்டர் அசோகன் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அவர் கூறும்போது, ‘இறந்தது பெண் யானை. இறந்த யானைக்கு 25 வயது இருக்கும். குடற்புழு நோய் தாக்கி யானை இறந்துள்ளது.’ என்றார். பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.