செய்திகள்
மதுபான கடைகள் மூடும் உத்தரவால் குடிமகன்கள் அதிர்ச்சி - பெண்கள் வரவேற்பு
ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவு தெரியாமல் சில குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் காத்துக்கிடந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது என்ற தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதற்கு தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மது வாங்க வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் . மது விற்பனையில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும். மேலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் மது வாங்க வருபவர் கட்டாயமாக குடை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்த நிபந்தனைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என புகார் எழுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 143 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மது வாங்க வந்தவர்கள் மதுவை வாங்கி சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்துக்கு மது விற்பனையானது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மது விற்பனை நடந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக 5 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆயின.
இந்நிலையில் மதுக்கடைகளில் முறையாக நிபந்தனைகள் பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது .மேலும் ஆன்லைன் மட்டும் விற்பனை செய்யலாம் என அனுமதி அளித்தது. இந்த உத்தரவு குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவு தெரியாமல் சில குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் காத்துக்கிடந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது என்ற தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதுக்கடை மூடும் உத்தரவுக்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடை மூடப்பட்டது குறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் இளங்கோ கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதற்கான முறையான அறிவிப்பு வந்தால் நிபந்தனைகளுடன் ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதற்கு தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மது வாங்க வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் . மது விற்பனையில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும். மேலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் மது வாங்க வருபவர் கட்டாயமாக குடை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெரும்பாலான கடைகளில் அரசு அறிவித்த நிபந்தனைகள் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என புகார் எழுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 143 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மது வாங்க வந்தவர்கள் மதுவை வாங்கி சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்துக்கு மது விற்பனையானது.
இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மது விற்பனை நடந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக 5 கோடியே 47 லட்சத்து 42 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆயின.
இந்நிலையில் மதுக்கடைகளில் முறையாக நிபந்தனைகள் பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது .மேலும் ஆன்லைன் மட்டும் விற்பனை செய்யலாம் என அனுமதி அளித்தது. இந்த உத்தரவு குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவு தெரியாமல் சில குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் காத்துக்கிடந்தனர். பின்னர் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது என்ற தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மதுக்கடை மூடும் உத்தரவுக்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடை மூடப்பட்டது குறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் இளங்கோ கூறியதாவது:-
நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதற்கான முறையான அறிவிப்பு வந்தால் நிபந்தனைகளுடன் ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.