செய்திகள்
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 750 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராசாம்பாளையம் சுடுகாடு பின்புறமுள்ள ஒரு காலி இடத்தில் 6 பேர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 750 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயரத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராசாம்பாளையம் சுடுகாடு பின்புறமுள்ள ஒரு காலி இடத்தில் 6 பேர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 750 ரொக்கப் பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.