செய்திகள்
விபத்து

ஜெயங்கொண்டம் அருகே மரத்தில் கார் மோதி முன்னாள் எம்.எல்.ஏ.,மகன் பலி

Published On 2020-05-08 09:01 GMT   |   Update On 2020-05-08 09:01 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி ராம தேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மகன் ராஜ்கமல் ( வயது30). இவர் தனது காரில் வயலில் உள்ள பண்ணைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த ராஜ்கமலை பொதுமக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News