செய்திகள்
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ஈரோடு மாநகர் பகுதியில் 56 கடைகளுக்கு சீல் வைப்பு
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ஈரோடு மாநகர் பகுதியில் 2 நாட்களில் 56 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் நோய்த்தடுப்பு விதி முறைகளை பின்பற்றாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.
இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் போலீசார் ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முதல் நாள் ஆய்வில் ஒரு ஏ.டி.எம் .உள்பட 46 கடைகள் முறையாக நோய் தடுப்பு முறையை பின்பற்றாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 2-வது நாளாக சூரம்பட்டி பகுதி முழுவதும் உதவி ஆணையாளர் விஜயா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கிருமிநாநினி வைக்காமலும் செயல்பட்டு வந்த கடைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வாறாக நேற்று மட்டும் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு 2 நாட்களில் 56 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாகவும் மாநகராட்சி உதவி ஆணை யாளர்கள் தலைமையில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தனிக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த கடைகளில் கடை ஊழியர் முக கவசம் அணிந்து தான் பொருட்கள் வழங்க வேண்டும்.
மேலும் கடைக்கு வரும் மக்களும் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 3 அடி தூரம் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் சில கடைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் நோய்த்தடுப்பு விதி முறைகளை பின்பற்றாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.
இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் போலீசார் ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முதல் நாள் ஆய்வில் ஒரு ஏ.டி.எம் .உள்பட 46 கடைகள் முறையாக நோய் தடுப்பு முறையை பின்பற்றாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 2-வது நாளாக சூரம்பட்டி பகுதி முழுவதும் உதவி ஆணையாளர் விஜயா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கிருமிநாநினி வைக்காமலும் செயல்பட்டு வந்த கடைகள் சீல் வைக்கப்பட்டன. இவ்வாறாக நேற்று மட்டும் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு 2 நாட்களில் 56 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாகவும் மாநகராட்சி உதவி ஆணை யாளர்கள் தலைமையில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தனிக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த கடைகளில் கடை ஊழியர் முக கவசம் அணிந்து தான் பொருட்கள் வழங்க வேண்டும்.
மேலும் கடைக்கு வரும் மக்களும் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். அவ்வாறு கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 3 அடி தூரம் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் சில கடைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.