செய்திகள்
கோப்பு படம்

தாளவாடி அருகே கர்நாடக மது பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது

Published On 2020-05-07 12:58 IST   |   Update On 2020-05-07 12:58:00 IST
தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் கர்நாடக மதுபாட்டிலை பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாளவாடி:

கொரோனா வைரஸ் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோல கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு, தனியார் மொத்த விற்பனை கடைகள் மற்றும் அரசின் சில்லறை விற்பனை மதுக்கடைகளை கடந்த 4-ந் தேதி திறந்தது. இதனால் மது பிரியர்கள் சந்தோசம் அடைந்தனர்.

தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதி குடிமகன்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று மது வாங்கி குடித்து வந்தனர். இந்நிலையில் பைனாப்புரம் ஜோரா ஒசூர் பகுதியில் கர்நாடக மது பாக்கெட் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப் - இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு போலீஸ் குமார் மற்றும் போலீசாருடன் சென்று சோதனை செய்த போது மோட்டார் சைக்கிளில் சிவமல்லு என்பவர் கர்நாடக மாநில மது கடையிலிருந்து 45 மது பாட்டில்கள் சுமார் 2160 பாக்கெட் வாங்கி வந்து தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் தாளவாடி அடுத்த சிமிட்டகள்ளி சிவமல்லு (வயது 38), மாதேஷ் (27), டிரைவர் பனகஹள்ளி மல்லன் (60) என தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் மது பாக்கெட்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News