செய்திகள்
ஈரோட்டில் 17-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் - சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளதால் தற்போது உள்ள அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரேடு:
ஈரேடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாற்றப்பட்டாலும் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளதால் தற்போது உள்ள அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது, நோய் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தீவிர முயற்சிக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அப்போது தான் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலத்தில் நீடிக்கும். பொது மக்கள் தொடர்ந்து சமூக விலகல், முககவசம் அணிவது உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளவர்கள் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஈரேடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாற்றப்பட்டாலும் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளதால் தற்போது உள்ள அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூறும் போது, நோய் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் தீவிர முயற்சிக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அப்போது தான் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலத்தில் நீடிக்கும். பொது மக்கள் தொடர்ந்து சமூக விலகல், முககவசம் அணிவது உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளவர்கள் உரிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.