செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு கடைசி தேர்வு தேதி குறித்து அறிவிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-05-06 12:35 IST   |   Update On 2020-05-06 12:35:00 IST
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள கடைசி தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சத்து மாத்திரைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கான தீர்வு காணப்பட்டவுடன் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள கடைசி ஒரு தேர்வும் நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படும்.

மேலும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி இன்று முதல் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News